உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தியை காட்டி பணம் பறித்த தலைமறைவு குற்றவாளி கைது

கத்தியை காட்டி பணம் பறித்த தலைமறைவு குற்றவாளி கைது

திருவொற்றியூர், வி.பி.நகரைச் சேர்ந்தவர் கோகுல், 22; தனியார் நிறுவன ஊழியர். இவர், ஏப்., 24ம் தேதி எண்ணுார் விரைவு சாலையில் நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, 'டியோ' ஸ்கூட்டரில் வந்த நான்கு பேர், கத்தியை காட்டி மிரட்டி, கோகுல் உள்ளிட்ட இருவரிடம் மொபைல்போன், 200 ரூபாயை பறித்து சென்றனர். இதுதொடர்பாக, திருவொற்றியூர் போலீசார், எட்வின், 24, உள்ளிட்ட மூவரை ஏற்கனவே கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுதாகர், 21, என்பவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை