உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்//

ரவுடியை வெட்டிய சிறுவர்கள் கைது: மணலி: எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜஸ்டின் பேபி, 29. இவர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7ம் தேதி, மணலியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்போது, மற்றொரு பைக்கில் பின்தொடர்ந்த இருவர், மணலி, ராஜி தெருவில், ராகேஷை மடக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பினர். பலத்த காயமடைந்த அவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரித்த மணலி போலீசார், ரவுடியை வெட்டிய திருவொற்றியூர், பலகை தொட்டி குப்பத்தைச் சேர்ந்த தீபக், 20, கார்த்திக், 25 மற்றும் மூன்று சிறுவர்களை, நேற்று கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்