நீரிழிவு சிகிச்சை ஆய்வு: ஐ.ஐ.டி.,யில் சிறப்பு மையம்
சென்னை : நீரிழிவு சிகிச்சையில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில், சென்னை ஐ.ஐ.டி.,யில் ஆய்வு மையம் திறக்கப்பட்டு உள்ளது.சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவர் சுப்பிரமணியன் சங்கரின் நிதியுதவியில், நீரிழிவு சிகிச்சைக்கான ஆய்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, அங்கு, 'சங்கர் நீரிழிவு ஆராய்ச்சிக்கான சிறப்பு மையம்' துவக்கப்பட்டு உள்ளது.இதற்காக, எமோரி யுனிவர்சிட்டியில் உள்ள குளோபல் ஆய்வு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதில், 15 பிஎச்டி., மாணவர்கள் சேர்க்கப்பட்டு, நவீன சிகிச்சைக்கான ஆய்வுகள் துவங்க உள்ளன.