மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான செஸ் பங்கேற்க அழைப்பு
23-Dec-2024
மறைமலைநகர், 'சேலஞ்சர்ஸ் செஸ்' அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டி, செங்கல்பட்டு அடுத்த மாமண்டூரில் உள்ள பிரசன்ன வித்யா மந்திர்பள்ளியில், வரும், 5ம் தேதி நடைபெறுகிறது. இதில், 16 வயதிற்கு உட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெற்று, முதல் 15 இடங்களை பிடிப்போருக்கு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு, https://Easypaychess.comமற்றும் https://Chessentry.inஎன்ற இணையதளத்திலும், 99405 67200, 99400 58265 ஆகிய மொபைல் போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என, சேலஞ்சர்ஸ் செஸ் அகாடமி தெரிவித்துள்ளது.
23-Dec-2024