சோளிங்கர் - சென்னை வரை மின் ரயில் இயக்க எதிர்பார்ப்பு
சென்னை, அரக்கோணம் சந்திப்பு அடுத்த சோளிங்கரில், புகழ்பெற்ற நரசிம்மர் கோவிலும், அருகில் ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, செல்கின்றனர்.சோளிங்கரில், போதிய ரயில் வசதி இல்லாததால், பயணியர் அரக்கோணம் சென்று, அங்கிருந்த பேருந்து, ஆட்டோக்களில் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு இயக்கப்படும் மின்சார ரயில்களை, சோளிங்கர் வரை நீட்டிக்க வேண்டும் என, பயணியர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அடுத்த ஆண்டு ஜன., மாதத்தில் வரும் புதிய கால அட்டவணையில் அறிவிக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறினர்.