அம்மன் கோவிலில் தீ மிதி விழா
அரும்பாக்கம்:அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலின், 42ம் ஆண்டு தீமிதி திருவிழா, ஜூன் 6ம் தேதி துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம், பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. வரும் 6ம் தேதி காலை 6:00 மணிக்கு, அதே பகுதி உத்தனாட்சி அம்மன் கோவிலில் இருந்து, 1,008 பால்குடம் எடுத்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்ய உள்ளனர்.