உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு இடிந்து பாட்டி, பேரன் காயம்

வீடு இடிந்து பாட்டி, பேரன் காயம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் முதல் தெருவைச் சேர்ந்தவர் தேசராணி, 73. இவருடைய பேரன், தட்சிணாமூர்த்தி, 19; மீன் வியாபாரி. நேற்று அதிகாலை, பாட்டியும், பேரனும் தங்களது ஓடு வீட்டில் படுத்துறங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக, ஓடுகள் மற்றும் கூரை ஒட்டுமொத்தமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பாட்டி - பேரன், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ