சமூக சேவைக்கு கவுரவம்
மயிலாப்பூர்:பாரதிய வித்யா பவன், சார்பில்உலக மனித அமைதி பல்கலை சார்பில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீதிபதி கே.வெங்கடேசன் 'சமூக சேவைக்காக' தொழிலதிபர் ரத்தினசாமி சீனிவாசனுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டினார். விழாவில் நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி தங்கராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.