உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு

விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு

சென்னை,நான்கு விரைவு ரயில்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரிக்கப்பட உள்ளது.தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:முன்பதிவு இல்லாத பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு, விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேலும், நான்கு விரைவு ரயில்களில் தற்போதுள்ள இரண்டு முன்பதிவு இல்லாத பெட்டிகளை நான்காக அதிகரித்து இயக்கப்பட உள்ளது மும்பை சி.எஸ்.எம்.டி., - எழும்பூர் விரைவு ரயிலில் இரு மார்க்கத்திலும், வரும் செப்., 5ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரித்து இயக்கப்படும் எழும்பூர் - சேலம் விரைவு ரயிலில் இருமார்க்கத்திலும், வரும் செப்., 6ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரித்து இயக்கப்படுகிறது தாதர் - புதுச்சேரி விரைவு ரயிலில் வரும் செப்., 7 முதலும், திருநெல்வேலி - தாதர் விரைவு ரயிலில் வரும் செப்., 9ல் இருந்தும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி