வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பல்லாவரத்தில் எவனாவது பக்ரீத் கொண்டாடி இருப்பான்.
சென்னை, துபாயில் இருந்து 304 பயணியருடன் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.சென்னையை நெருங்கிய விமானம், தரையிறங்க தாழ்வான பகுதியில் பறக்க துவங்கியபோது, எதிர் திசையில் இருந்து பச்சை நிற லேசர் ஒளி விமானத்தின் மீது அடிக்கப்பட்டது.இதனால் விமானி, நிலை குலைந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர், சாதுர்யமாக செயல்பட்டு, விமானத்தை மீண்டும் உயரத்தில் பறக்க செய்தார். இதுகுறித்து, விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு உடனடியாக புகார் தெரிவித்தார்.பி.சி.ஏ.எஸ்., மற்றும் ஏர்போர்ட் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதற்கிடையே எந்த பிரச்னையும் இல்லாமல் பத்திரமாக விமானம் தரையிறங்கியது.சம்பந்தப்பட்ட போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. விமான நிலையம் சுற்றியுள்ள மற்ற காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மே 25ம் தேதி, இதே விமானத்தின் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடித்தனர். இப்போது மீண்டும் அதே சம்பவம் அரங்கேறியுள்ளது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தும், இது மாதிரியான சம்பவங்கள் தொடர்வது, சென்னையில் விமான பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக மாறி உள்ளது.
பல்லாவரத்தில் எவனாவது பக்ரீத் கொண்டாடி இருப்பான்.