உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில்வே சுரங்கப்பாதையில் ஆண் சடலம்

ரயில்வே சுரங்கப்பாதையில் ஆண் சடலம்

வியாசர்பாடி, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய நடைமேடையில் இருந்து பயணச்சீட்டு வாங்கும் இடத்திற்கு செல்லக்கூடிய சுரங்கப்பாதையில், மழை காரணமாக தண்ணீர் குளம் போல் தேங்கியிருந்தது.இதனால் சுரங்கப்பாதையை யாரும் பயன்படுத்தவில்லை.இந்நிலையில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அதில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த பெரம்பூர் ரயில்வே போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.விசாரணையில், இறந்தவர் பெரம்பூரைச் சேர்ந்த முருகன், 50, என்பதும், செருப்பு தைத்து வந்துள்ளார். மது போதையில் சுரங்கப்பாதையில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ