மேலும் செய்திகள்
வாங்கிய கடனுக்கு பதிலாக பெண்களை காட்டி மோசடி
02-Dec-2024
கானத்துார்,பாரிமுனை, சிண்டா சாகிப் தெருவைச் சேர்ந்தவர் சிராக்பி ஜெயின், 31. இவர், தங்கம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.இவரிடம், துாத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த லட்சுமணன், 49, என்பவர், ஒரு கிலோ தங்கம் இருப்பதாக கூறி உள்ளார்.கடந்த அக்., 20ம் தேதி, இ.சி.ஆர்., கானத்துாரில் உள்ள ஒரு ேஹாட்டலில் இருவரும் சந்தித்தனர். அப்போது, லட்சுமணன், பார்சலில் இருந்த ஒரு தங்க கட்டியை எடுத்து காட்டி உள்ளார். அதை பரிசோதித்ததில், சுத்தமான தங்க கட்டி என தெரிந்தது. உடனே, சிராக்பி ஜெயின், பார்சலை வாங்கி விட்டு, 76 லட்சம் ரூபாய் வழங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று பார்சலை பிரித்தபோது, அந்த தங்க கட்டிகளோடு கொடுக்கப்பட்ட மற்ற அனைத்தும் போலி என தெரிந்தது.இதுகுறித்த புகாரின்படி கானத்துார் போலீசார் விசாரித்தனர். தலைமறைவாக இருந்த லட்சுமணனை, நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
02-Dec-2024