அரசு மருத்துவமனையில் பைக் திருடியவர் கைது
சென்னை, வில்லிவாக்கம், பாரதி நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ், 49. நேற்று முன்தினம் காலை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினரை காண இருசக்கர வாகனத்தில் சென்றார்.உறவினரை பார்த்துவிட்டு திரும்பியபோது, வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்திருந்த, அவரது வாகனம் திருடு போயிருந்து.ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். வாகனத்தை திருடிய, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை சேர்ந்த ரமேஷ், 36 என்பவரை, நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, ஐந்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.