உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மங்களூரு, ராமநாதபுரம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

மங்களூரு, ராமநாதபுரம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை, பொங்கல் பண்டிகையொட்டி, எழும்பூர் - மங்களூரு, ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தெற்கு ரயில்வே, நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூரில் இருந்து, நாளை மாலை 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:50 மணிக்கு கர்நாடகா மாநிலம், மங்களூரு செல்லும்.வழித்தடம்: பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை. ராமநாதபுரத்தில் இருந்து வரும் 19ம் தேதி மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு தாம்பரம் வரும். வழித்தடம்: மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, சிதம்பரம், கடலுார் போர்ட், விழுப்புரம் வழியாக வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை