உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பனகல் பூங்காவில் 16 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ நிலைய பணி தீவிரம்

பனகல் பூங்காவில் 16 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ நிலைய பணி தீவிரம்

சென்னை, கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி புதிய மெட்ரோ ரயில் தடத்தில், தியாகராய நகர், பனகல் பூங்காவில், 16 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் இட அளவை குறைத்துள்ளோம். பயணியர் வருகை அதிகமாக இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களை தேர்வு செய்து, பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி தடத்தில், பனகல் பூங்காவில் சுரங்கப்பாதையில், பிரமாண்டமாக மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆரம்ப பணிகள் முடிந்து, தற்போது மெட்ரோ நிலையம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. பூமியில் இருந்து 16 மீட்டர் ஆழத்தில், 230 மீட்டர் நீளத்திற்கு, 20 மீட்டர் அகலத்தில் இந்த மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது. பயணியர் வந்து செல்ல லிப்ட், எஸ்கலேட்டர்கள் அமைக்கப்படும். பயணியரை கவரும் வகையில், பல்வேறு உள்அலங்காரமும் செய்யப்படும். வணிக கடைகளும் இடம் பெறும். தற்போது 20 சதவீத பணிகளே முடிந்துள்ளன. வரும் 2026 மே மாதத்திற்குள் இந்த பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ