உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நர்சிடம் மொபைல் போன் பறிப்பு

நர்சிடம் மொபைல் போன் பறிப்பு

பள்ளிக்கரணை, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுவேதா, 23. பள்ளிக்கரணை, காமகோடி நகரில் உள்ள சூர்யா பெண்கள் விடுதியில் தங்கி, அதே பகுதி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பணி முடித்து, தங்கும் விடுதிக்கு, சாலையில் நடந்து சென்றார்.என்.ஐ.ஓ.டி., பேருந்து நிறுத்தம் அருகே, பின்னால் வந்த மர்ம நபர், சுவேதாவின் கையிலிருந்த, 'விவோ' நிறுவன மொபைல் போனை பறித்து, அங்கிருந்து தப்பித்தார்.சுவேதா புகாரின்படி, பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை