மதுரவாயல் எம்.எல்.ஏ., நிதியில் பல்நோக்கு கட்டடம் திறப்பு
வளசரவாக்கம் மண்டலம், போரூர் சபரி நகர், 1வது குறுக்கு தெருவில், மதுரவாயல் தொகுதி மேம்பாட்டு நிதி, 37 லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தை தி.மு.க., - எம்.எல்.ஏ., கணபதி, நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில், வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன், கவுன்சிலர் சங்கர் கணேஷ், வட்ட கழக செயலர் மோசஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.