உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பல்நோக்கு கட்டடம் பயன்பாட்டிற்கு திறப்பு

 பல்நோக்கு கட்டடம் பயன்பாட்டிற்கு திறப்பு

அண்ணா நகர்: கிழக்கு அண்ணா நகரில், 34 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம், மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறக்கப்பட்டது. அண்ணா நகர் மண்டலம், 102வது வார்டு, கிழக்கு அண்ணா நகர், 'என் பிளாக்' 24வது தெருவில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடம் , நீண்ட காலம் பயன்பாடின்றி கிடந்தது. எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்நோக்கு கட்டடம் கட்ட, மாநகராட்சி முடிவெடுத்தது. 34 லட்சம் ரூபாய் செலவில், 500 சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டி ற்கு நேற்று திறக்கப்பட்டது. அண்ணா நகர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மோகன், மண்டல அதிகாரி உள்ளிட்டோர் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை