உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ்சில் போலீஸ்காரர் மனைவியிடம் திருட்டு

பஸ்சில் போலீஸ்காரர் மனைவியிடம் திருட்டு

திருமங்கலம், சென்னை, நொளம்பூர், டி.வி.எஸ்., காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 50. இவர், எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் செக்யூரிட்டி குற்றப்பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிகிறார்.இவரது மனைவி பச்சையம்மாள், 44, என்பவர், நேற்று முன்தினம், நொளம்பூரில் இருந்து, தடம் எண்: '147' பேருந்தில், தி.நகருக்கு சென்றார். பேருந்தில் ஏறியவுடன், கூட்டமாக இருந்ததால், தன் கையில் இருந்த கட்டப்பையை இருக்கையில் அமர்ந்திருந்த நபரிடம் கொடுத்துள்ளார். அமைந்தகரை ஸ்கை வாக் நிறுத்தில், பச்சையம்மாள் இறங்கியுள்ளார்.பையில் உள்ள பர்ஸ்சை தேடிய போது, திருடுபோனது தெரிந்தது. அதில், கடவுச்சொல் எண் எழுதப்பட்ட பாரத வங்கியின் ஏ.டி.எம்., அட்டை உள்ளிட்டவை இருந்துள்ளன.சிறிது நேரத்தில், அவரது மொபைல் எண்ணிற்கு அடுத்தடுத்து குறுந்தகவல் வந்தது. அதில், திருமங்கலம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில், இரு முறை, தலா 10,000 ரூபாயும், ஒரு முறை, 300 ரூபாயும் எடுத்தது போல் பதிவாகியிருந்தது. பச்சையம்மாள் புகாரின்படி, திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி