உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் நிறுவன மேலாளர் மர்ம மரணம் 

தனியார் நிறுவன மேலாளர் மர்ம மரணம் 

வேளச்சேரி: வேளச்சேரி, திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு, 58; தனியார் செக்யூரிட்டி நிறுவன மேலாளர். இவரது மனைவி மற்றும் மகள், கோவையில் வழக்கறிஞராக பணி புரிகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பாபுவை, மனைவி தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை. அருகிலுள்ள உறவினரை பார்க்க சொன்ன போது, வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது பாபு கழிப்பறையில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி