மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி உறவினர்கள் சாலை மறியல்
ராயபுரம், சென்னை, தண்டையார்பேட்டை, அன்னை சத்யா நகர், 3வது தெருவை சேர்ந்தவர் வேதகிரி. இவரது மகன் நந்தகுமார், 29 . இவர் நேற்று, சிங்கார கார்டன் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில், சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், நந்தகுமார் சுயநினைவு இன்றி கீழே விழுந்தார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையறிந்த உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர், மருத்துவமனை முன் குவிந்தனர். கட்டட உரிமையாளர்கள், பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். ராயபுரம் போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, கலைந்து சென்றனர்.