சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலை திறப்பு
சென்னை, சிந்து சமவெளி நாகரிகத்தை முதன் முதலில் வெளிப்படுத்திய, சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலின், 149வது பிறந்த நாளையொட்டி, 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, அவரது உருவச் சிலையை, முதல்வர் ஸ்டாலின், சென்னையில் நேற்று திறந்து வைத்தார். எழும்பூர் அரசு அருங்காட்சிய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த சிலைக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன், சேகர்பாபு, சுப்பிரமணியன் உள்ளிட்டோரும், மார்ஷலின் உருவச் சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.***