தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
சென்னை, தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள், வரும் 13ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன.பயணியர் தேவையை கருத்தில் கொண்டு, தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில் - தாம்பரம் இடையே ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 6 முதல் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதேபோல், தாம்பரம் - நாகர்கோவில் இடையே திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 7 முதல் 14ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.