தாம்பரம் - போத்தனுார் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
சென்னை:சென்னை தாம்பரம் - போத்தனுார் சிறப்பு ரயில், ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.★ தாம்பரத்தில் இருந்து வெள்ளிக் கிழமைகளில் மாலை 5:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், வரும் மே 9, 16, 23, 30 ஜூன் 6ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்படுகிறது★ போத்தனுாரில் இருந்து ஞாயிறுகளில் இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வரும் மே 11, 18, 25 ஜூன் 1, 8ம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மதுரை - ராஜஸ்தானுக்குஎழும்பூர் வழி சிறப்பு ரயில்சென்னை:மதுரையில் இருந்து எழும்பூர் வழியாக ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன.இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: ★ மதுரையில் இருந்து வரும் 28ம் தேதி காலை 10:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் பகல் 12:30 மணிக்கு பகத் கீ கோதிக்கு செல்லும்★ பகத் கீ கோதியில் இருந்து வரும் மே 1ம் தேதி காலை 5:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் காலை 8:30 மணிக்கு மதுரைக்கு செல்லும். திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, எழும்பூர் வழியாக இயக்கப்பட உள்ளன★ சென்ட்ரலில் இருந்து நாளை இரவு 7:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் பகல் 12:30 மணிக்கு பகத் கீ கோதிக்கு செல்லும்★ பகத் கீ கோதியில் இருந்து வரும் 30ம் தேதி காலை 5:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் இரவு 11:15 மணிக்கு சென்ட்ரல் வரும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கான்பூர் - பெங்களூருக்குபெரம்பூர் வழி சிறப்பு ரயில்சென்னை,:உத்தர பிரதேச மாநிலம்கான்பூரில் இருந்து பெரம்பூர் வழியாக எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: கான்பூரில் இருந்து, வரும் 27, மே 4, 11, 18, 25, ஜூன் 1ம் தேதிகளில் இரவு 7:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி வழியாக, புறப்படும் நாளில் இருந்து, அடுத்த மூன்றாவது நாளில் மாலை 6:30 மணிக்கு, எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு செல்லும் எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து, வரும் 30, மே 7, 14, 21, 28 ஜூன் 4ம் தேதிகளில் காலை 7:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக, அடுத்த மூன்றாவது நாள் அதிகாலை 2:00 மணிக்கு கான்பூர் செல்லும். இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.