உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழ வியாபாரியை வெட்டிய ஆட்டோ ஓட்டுனர் கைது

பழ வியாபாரியை வெட்டிய ஆட்டோ ஓட்டுனர் கைது

அண்ணாசாலை, ராயப்பேட்டை, முத்தையா இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன், 40; பழ வியாபாரி. நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில், எஸ்.பி.ஐ., வங்கி அருகே தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்தார்.அப்போது, அவருக்கு பழக்கமான ஆட்டோ ஓட்டுனர்களான லெனின், 47, உட்பட இருவர், 'கூகுள் பே'யில் 100 ரூபாய் அனுப்புவதாக கூறி, கையில் பணம் வாங்கியுள்ளனர்.ஆனால், பிறகு பணம் அனுப்புவதாக கூறிச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து வந்த அவர்கள், 500 ரூபாய் கேட்டுள்ளனர்.'கூகுள் பே'யில் பணம் அனுப்பினால் தான் கையில் பணம் தர முடியும் என, தாமோதரன் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஓட்டுனர்கள், பழம் வெட்டும் கத்தியால் அவரது தலையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.இதில் காயமடைந்த தாமோதரன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரை விசாரித்த அண்ணாசாலை போலீசார், ராயப்பேட்டை பாரதி சாலையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் லெனின், 47, என்பவரை கைது செய்தனர். தலைமறைவான நபரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை