உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழிற் பயிற்சி விண்ணப்பிக்க வரும் 15 கடைசி

தொழிற் பயிற்சி விண்ணப்பிக்க வரும் 15 கடைசி

சென்னை, 'மாநகராட்சி தொழிற்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்களின் எதிர்காலம் சிறக்க, மத்திய அரசின் என்.சி.வி.டி., சான்றிதழுடன் கூடிய தொழிற்பயிற்சி, ஆறு தொழில் பாடப்பிரிவுகளில் அளிக்கப்படுகிறது.அதன்படி கணினி இயக்குபவர், நிகழ்ச்சி தொகுப்பாளர், மோட்டார் வாகன மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், மின் பணியாளர், பொருத்துநர் ஆகிய பாடப்பிரிவுகளில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் சேர, 14 முதல் 40 வயது உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. இப்பயிற்சி முடிப்பவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும். தகுதியுடைய மாணவர்களுக்கு மாதம், 10,500 ரூபாய் சம்பளத்துடன் கூடி பயிற்சி அளிக்கப்படும்.தொழிற் பயிற்சியில் சேர விரும்புவோர், www.chennaicorporation.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி