உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏர்போர்ட்டுக்கு குண்டு மிரட்டல் விடுத்த முதியவர்

ஏர்போர்ட்டுக்கு குண்டு மிரட்டல் விடுத்த முதியவர்

சென்னை, சென்னையில் உள்ள மாநில காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று மாலை 4:30 மணிக்கு, அழைப்பு ஒன்று வந்தது.அதில் பேசிய மர்ம நபர், 'சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது; அவை வெடிக்கும்' என குறிப்பிட்டு, அழைப்பை துண்டித்தார்.இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவினர், மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர்.ஆனால், வெடிகுண்டு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதே போல், திருச்சி விமான நிலையத்திலும் சோதனை நடத்தப்பட்டு, மிரட்டல் புரளி என தெரியவந்தது. விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், தஞ்சாவூரை சேர்ந்த, 80 வயது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கு, 1 கோடி ரூபாய் வரை தண்டனை என, சட்ட விதிகளை மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வாய்மையே வெல்லும்
டிச 25, 2024 09:59

சம்பிராணிக்கும் மாட்டியவுடன் பம்மிட்டு மனநலம் பாதிப்பு என்கிற சால்ஜாப்புக்கும் ஆறு வித்யாசங்கள் கண்டுபிடித்து சொல்பவர்க்கு ஒரு ஓட்டை காலணா இலவசம் ...


enkeyem
டிச 25, 2024 12:03

80 வயது மனா நலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு ஏர்போர்ட்டுக்கு நம்பர் தெரிந்து போன் செய்து மிரட்டும் அளவுக்கு மனம் தெளிவாக இருந்ததா? இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் மீண்டும் மிரட்டல் விடுக்க மாட்டாரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை