உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓரிரு ஆண்டு கூட தாக்குப்பிடிக்காத திருமங்கலம் மேம்பால சுவர் பூங்கா

ஓரிரு ஆண்டு கூட தாக்குப்பிடிக்காத திருமங்கலம் மேம்பால சுவர் பூங்கா

திருமங்கலம்:சென்னை மாநகரை அழகுப்படுத்தும் பணி, 'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மேம்பாலங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் சுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து, நீர் தெளித்து வந்தனர்.இந்த நிலையில், அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட திருமங்கலம் மற்றும் அண்ணா வளைவு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் மேம்பாலத் துாண்களில், சுவர்கள் பூங்காக்கள் அமைக்கப்பட்டன.ஆனால், ஓரிரு ஆண்டுகளிலே போதிய பராமரிப்பின்றி மோசமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைத்த பூங்காவில் செடிகள் இன்றியும், பிளாஸ்டிக் கப்கள் உடைந்து காணப்படுகின்றன. துாண்கள் இடையே வைத்த செயற்கை நீரூற்றும் இயங்காமல் உள்ளன.இதனால், மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !