டாஸ்மாக் கடை சுவரில் ஓட்டை போட்டு திருட்டு
-காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அருகே, செவிலிமேடு பகுதியில் பாலாற்றையொட்டி 'டாஸ்மாக்' மதுபானக் கடை இயங்கி வருகிறது.கடந்த சனிக்கிழமை பணி முடித்து, இரவு ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர்.நேற்று முன்தினம் முற்பகல், வழக்கம்போல கடையை ஊழியர்கள் திறந்து பார்த்தபோது, கடையின் பின்பக்க சுவரில் ஓட்டை போட்டிருப்பது தெரியவந்தது.அதன் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், 30,000 ரூபாய் மற்றும் மது பாட்டில்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது.ஆனால், போலீஸ் தரப்பில், எந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். டாஸ்மாக் கடைக்கு பின்புறம், வயல்வெளியும், பாலாறும் இருப்பதால், ஆள் நடமாட்டம் இன்றி உள்ளது.இதை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள், சுவரில் ஓட்டை போட்டு திருடி சென்றிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.