21 கிலோ குட்கா கடத்திய இருவர் கைது
* வானகரம் ஓடமா நகர் பாலம் அருகே, நேற்று முன்தினம் வானகரம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஆட்டோவை மடக்கி சோதனை செய்தபோது, அதில், 21 கிலோ ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்த, அனகாபுத்துாரை சேர்ந்த நாகராஜ், 38, துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மகேஷ், 45 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.