உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவனின் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு செங்கையில் இருவர் கைது

சிறுவனின் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு செங்கையில் இருவர் கைது

சித்தாமூர், செங்கல்பட்டில், சிறுவனின் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த விளாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 55. இவரது வீட்டின் அருகே நீண்ட நாட்களாக, உடலில் காயம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசிய நிலையில் தெருநாய் ஒன்று சுற்றி திரிந்து வருகிறது. அந்த நாயை சுட்டு பிடிக்க, சிறுக்கரணை கிராமம் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த சரத்குமார், 30, என்பவரை, நேற்று முன்தினம் காலை அழைத்து வந்துள்ளார்.குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த நாயை, பறவைகளை சுடும் நாட்டு துப்பாக்கியால் சுட்ட போது, நாய் தப்பியது. அந்த வழியாக நடந்து சென்ற கொக்கரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த 6ம் வகுப்பு மாணவன் குறளரசன், 11, தலையில் குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து சிறுவனின் தந்தை முருகன், சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, சரத்குமார் மற்றும் அவருடன் வந்த வெங்கடேசன் ஆகியோரை நேற்று கைது செய்து, மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ