உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலியல் தொழில் நடத்திய இருவர் கைது

பாலியல் தொழில் நடத்திய இருவர் கைது

சென்னை:சென்னையில் வெவ்வேறு பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் உட்பட இருவரை, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.எம்.ஜி.ஆர்., நகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தெருவிலுள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக, விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று சம்பவ இடத்தில், போலீசார் ஆய்வு செய்த போது, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரெஜினா, 57, என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து, பாலியல் தொழில் நடத்தியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.அதேபோல், வளசரவாக்கத்தில் பாலியல் தொழில் நடத்தி வந்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த குமார், 55, என்பவரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.இவர்களிடம் சிக்கியிருந்த இரண்டு பெண்களை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை