உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாய்பிடி ஊழியர்களுக்கு தடுப்பூசி

நாய்பிடி ஊழியர்களுக்கு தடுப்பூசி

சென்னை, உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தையொட்டி, மாநகராட்சி பகுதிகளில், 'ரேபிஸ்' நோய் தாக்கத்தில் இருந்து நாய் பிடிக்கும் பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவ பணியாளர்களை பாதுகாத்திடும் வகையில், தடுப்பூசி முகாம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.இதில், நாய் பிடிக்கும், 215 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதுடன், சீருடைகள், காலணிகள், கையுறைகள் நாய் பிடிக்கும் வலைகளை, சுகாதார நிலைக்குழு தலைவர் சாந்தகுமாரி வழங்கினார்.இந்த முகாமில், மாநகர நல அலுவலர் ஜெகதீசன், மருத்துவ அலுவலர் பானுமதி, கால்நடை மருத்துவ அலுவலர் கமால் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை