நலத்திட்ட உதவி வழங்கினார் வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அம்பத்தூரில் நடைபெற்ற மே தின விழாவில் ஜி.கே. வாசன் எம்.பி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் தலைமை வகித்த இளவரி,விடியல் சேகர்,பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர். வெங்கடேஷ், பி.ஜவஹர் பாபு, திருவேங்கடம் ஜி.பி. நம்பி, ஆகியோர் தலைமை வகித்தனர். துணைத் தலைவர்கள் சக்தி வடிவேல்,முனவர் பாஷா, முன்னாள் எம்.எல்.ஏ.இ.எஸ்.எஸ்.ராமன் மாவட்டத் தலைவர்கள் பாடி சுந்தரம், மனோகரன், அருண்குமார்,பத்மநாபன்,சென்னை நந்து,கோவிந்தசாமி, திநகர் கோதண்டன் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் கே.ஆர். டி ரமேஷ்,சங்கர் தொழிற்சங்க நிர்வாகிகள்கே.ஜி. ஆர். மூர்த்தி,கே எஸ்.ரவீந்திரன்,எஸ் பாண்டியன், கே.வெங்கடேஷ் மகளிர் அணி நிர்வாகிகள் கல்யாணி,நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.