மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து பெண் பலி
08-Nov-2025
கொடுங்கையூர்: கொடுங்கையூர், சரவணன் நகரை சேர்ந்தவர் விஜய்சிங், 43. இவர், ஸ்டீல் கம்பெனியில் தங்கி வேலை செய்து வருகிறார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், நேற்று மாடியில் மது குடித்து விட்டு, படியில் இருக்கும் போது, கால் தவறி கீழே விழுந்தார். அதில் தலையில் அடிபட்டு படுகாயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
08-Nov-2025