4வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி
உள்ளகரம்:அரியலுாரைச் சேர்ந்தவர் பரமசிவம், 37. இவர், உள்ளகரம் செல்வகணபதி தெருவில் உள்ள 'கேட்டரிங் சென்டரில்' அங்கேயே தங்கி, சமையல்காரராக பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் இரவு 4வது மாடியில் இருந்து மது அருந்தி உள்ளார். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார்.