உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

பெரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

அன்னூர் : அன்னூர் சின்னம்மன், பெரியம்மன் கோவிலில் பொங்கல் விழா வரும் 19ம் தேதி நடக்கிறது. அன்னூர் சின்னம்மன், பெரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ராக்கியண்ணசாமி சன்னதியில் வருகிற 19ம் தேதி மதியம் 12.00 மணிக்கு அபிஷேக ஆராதனை, அன்னதானம் நடக்கிறது. கணபதி ஹோமம் 20ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு துவங்குகிறது. பொங்கல் வைத்தல் காலை 7.00 மணிக்கும், பெண்கள், குழந்தைகள் பால் குடம் எடுத்து வருதல், பூங்கரகம் எடுத்தல், அன்னதானம் வழங்குதல் மதியம் நடக்கிறது. சிவன், சக்தி கரகங்கள் மாலையில் நதியில் விடப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை