உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணியில் 51 மி.மீ., மழை; 42.87 அடியாக நீர் மட்டம் உயர்வு

சிறுவாணியில் 51 மி.மீ., மழை; 42.87 அடியாக நீர் மட்டம் உயர்வு

கோவை : சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 51 மி.மீ., மழை பதிவாகியுள்ளது; நீர் மட்டம், 42.87 அடியாக உயர்ந்திருக்கிறது.கோவை மாநகராட்சியின் மேற்குப்பகுதி மற்றும் வழியோர கிராமப் பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக, சிறுவாணி அணை திகழ்கிறது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில், ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மழைப்பொழிவு காணப்படுகிறது. கடந்த, 25ம் தேதி - 26 மி.மீ., 26ம் தேதி - 20 மி.மீ., 27ம் தேதி - 12 மி.மீ., 28ம் தேதி - 20 மி.மீ., 29ம் தேதி - 51 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 51 மி.மீ., அடிவாரத்தில், 17 மி.மீ., மழை பெய்திருக்கிறது. இதன் காரணமாக, 42.87 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. குடிநீர் தேவைக்காக, 10.34 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை