உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட கலைத்திருவிழா மாணவர்களுக்கு பாராட்டு

மாவட்ட கலைத்திருவிழா மாணவர்களுக்கு பாராட்டு

கிணத்துக்கடவு, ;அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் விதத்தில், தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் துவங்கி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவு வரை போட்டிகள் நடத்தப்படுகிறது.இதில், கிணத்துக்கடவு, மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவில் நடந்த கலைத் திருவிழா போட்டியில், வில்லுப்பாட்டு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவில் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மயிலாத்தாள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை