உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் கம்பத்தில் பிடிபட்ட உடும்புவனத்துறையிடம் ஒப்படைப்பு

மின் கம்பத்தில் பிடிபட்ட உடும்புவனத்துறையிடம் ஒப்படைப்பு

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பிடிபட்ட உடும்பு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மின்கம்பத்தில் உடும்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பொதுமக்கள் பார்த்தனர். பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பட்டியலில் உடும்பு உள்ளதால், இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் உடும்பை பிடித்துச் சென்று, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை