மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
20-Aug-2024
கோவை:தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் சார்பில், மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் கு. வடமதுரை கோட்டத்திற்கு வரும், 4ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், மின்பகிர்மான வட்ட பொறியாளர் விஜயகவுரி நேரடியாக பங்கேற்று குறைகளை கேட்கவுள்ளார். இதில், அனைத்து உதவி, செயற் பொறியாளர்கள் பங்கேற்கவுள்ளதால், உடனுக்குடன் தீர்வுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகவலை, கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
20-Aug-2024