உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜை

கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜை

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதலிங்கேஸ்வரர் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஜோதிலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜப்பெருமாள் கோவிலில், பக்த ஆஞ்சநேயருக்கு அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆஞ்சநேய பகவான், மலர் மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.சூலக்கல் மாரியம்மன் கோவில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்பராம்பாளையம் ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து மக்கள் வழிபாடு செய்தனர்.உடுமலை: சின்னபொம்மன்சாளை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்புபூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், உடுமலை மாரியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில், சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன் கோவில், அமரபுயங்கீஸ்வரர் கோவில், கொழுமம் காசி விஸ்வநாதர் கோவில், தாண்டேஸ்வரர் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை