உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சி செயலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

ஊராட்சி செயலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

அன்னுார்: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:முறையான கால முறை சம்பளம் பெற்று வரும், ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 12ம் தேதி மாநில அளவில் அனைத்து ஊராட்சி செயலர்களும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அன்றைய தினம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.வரும் ஏப். 4ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில், 10 ஆயிரம் ஊராட்சி செயலர்கள் திரண்டு கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை