உள்ளூர் செய்திகள்

மக்கள் மனசு

லேடீஸ் பாதுகாப்பு பிரச்னைதான் ரொம்ப பெரிய பிரச்னையா இருந்துச்சு. இந்த ஆட்சில அந்தத் தப்பு மட்டும் நடக்கவே கூடாது. முதல்ல அத கட்டுப்படுத்தணும். அப்புறம், இல்லாதப்பட்டவங்களுக்கு நல்லது பண்ணனும். – அப்சல், கரும்புக் கடை பொதுமக்கள் கவர்ன்மென்ட் ஆபீசுக்கு போகவே பயப்படறாங்க. எதுக்கு எவ்வளவு லஞ்சம் கேப்பாங்களோ, எவ்வளவு நாள் அலைய விடுவாங்களோன்னு பயமா இருக்கு. இத மொதல்ல சரி பண்ணனும். ரொம்ப தைரியமா, எந்த ஒரு தயக்கமும் இல்லாம ஒரு கவர்ன்மென்ட் ஆபிசுக்குப் போய், நமக்கு வேணும்ங்கறத அப்ளை பண்ணவோ, வாங்கிட்டு வரவோ முடியணும். அத மட்டும் பண்ணிட்டா, மத்தது எல்லாம் தானா சரி ஆயிடும். – சுதீப் கவுதம், காந்திபுரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ