உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா

அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பூக்குண்டம் திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி பிப்., 27ம் தேதி கொடியேற்றுதல், பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் அதிகாலை சக்தி கரகம், குண்டத்தில் பூ வளர்த்தல் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு அக்கினி கரகம் அழைத்தல், 8:00 மணிக்கு பூ மிதித்தல், காலை, 10:00 மணிக்கு அக்னி அபிஷேகம் தொடர்ந்து அன்ன தானம் நடந்தது. இன்று மஞ்சள் நீராடுதல்நிகழ்ச்சி நடக்கிறது. இம்மாதம், 16ம் தேதி வசந்த பூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ