உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த கோரிக்கை

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த கோரிக்கை

கோவை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை வடக்கு வட்டக் கிளை பேரவைக் கூட்டம்   ரயிவே ஸ்டேஷன் அருகில் உள்ள தாமஸ் கிளப்பில் நடந்தது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தேர்தல் வாக்குறுதியின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி மற்றும் ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். தமிழக அரசின் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை, சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பேரவைக் கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவராக நதியா, செயலாளராக ரவி, பொருளாளராக வளர்மதி உள்ளிட்ட, 12 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை