கோவில்களில் மாசி மகம் சிறப்பு அபிேஷக பூஜை
வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில்,மாசி மகம் சிறப்பு பூஜையையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக்கொண்டு சிறப்பு அபிேஷக பூஜையும், தொடர்ந்து அலங்கார பூஜையும் நடந்தது.அதனை தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி இறைவனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாழைத்தோட்டம் மாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் மாசி மகம் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.