உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயணியர் நிழற்கூரை போஸ்டரால் அலங்கோலம்

பயணியர் நிழற்கூரை போஸ்டரால் அலங்கோலம்

வால்பாறை:வால்பாறையில், பயணியர் நிழற்கூரையில், விதிமுறை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் நிழற்கூரைகள் கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான பயணியர் நிழற்கூரைகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.இந்நிலையில், வால்பாறையில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான பயணியர் நிழற்கூரையை சுற்றிலும், விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால், நிழற்கூரை அலங்கோலமாக காட்சியளிக்கிறது.பயணியர் கூறுகையில், 'வால்பாறையில், பயணியர் நிழற்கூரையை அரசியல் கட்சியின் ஆக்கிரமித்து, போட்டி போட்டுக்கொண்டு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதனால், நிழற்கூரை அலங்கோலமாக காட்சியளிக்கிறது.நிழற்கூரையில் விதிமுறையை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை நகராட்சி அதிகாரிகள் பயணியர் அகற்ற வேண்டும். போஸ்டர் ஒட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !