பயன்படுத்த முடியாத நிழற்குடை
சூலுார்: செஞ்சேரிமலையில் உள்ள பயணிகள் நிழற்குடை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பாளையம் ஊராட்சியில், செஞ்சேரி மலை பி.ஏ.பி., வாய்க்கால் அருகில் உள்ள நிழற்குடை புதர் மண்டி, சுவரொட்டிகள் ஒட்டும் இடமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் குடிமகன்கள் அமர்ந்து மது குடிக்கும் இடமாக மாறியுள்ளது. இதனால், பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். உடனடியாக, நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.