மேலும் செய்திகள்
இளநீர் விலை ரூ.2 உயர்வு
03-Feb-2025
பொள்ளாச்சி,; ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் நான்கு ரூபாய் உயர்த்தப்பட்டு, 40 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 15,500 ரூபாய்.இளநீர் வரத்து தேவையைக் காட்டிலும் மிகவும் குறைந்து காணப்படுவதால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இளநீரின் எடை குறைவாக இருப்பதன் காரணமாக குறைந்தபட்சம் 37 நாட்களுக்குப் பிறகு அறுவடை செய்ய வேண்டும். இளநீரின் விலை தொடர்ந்து கணிசமாக உயர வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் நிதானமாக நல்ல விலையை கேட்டு பெற வேண்டும். கர்நாடக மாநிலம் மத்துார் சந்தை மற்றும் கே.ஆர்., பேட் சந்தைகளில் வரத்தும் தரமும் குறைந்து காணப்படுகிறது.இந்த சந்தைகளில் கடந்த வாரம், பொள்ளாச்சி பகுதியை விட கூடுதல் விலைக்கு இளநீர் விற்பனையாகியுள்ளது. இப்பகுதிகளில், இனி வரக்கூடிய நாட்களில், இளநீர் வரத்து மேலும் கணிசமாக குறையும். இவ்வாறு, அவர் கூறினார்.
03-Feb-2025